Friday, June 11, 2021

துதிக்கை கொண்ட தலைவா - உன்னை 

நம்பிக்கை கொண்டு தொழுதேன் - உன்

வலக்கை கொண்டு - என்

பகையை கொன்று  போவாயோ


நித்தம் எந்தன் நினைவில் - உன்னை

நாளும்  சுமந்தேன்  - என் 

நிலையை மறந்தேன்  - உந்தன்

கருனை மழை பொழியாயோ


நடனமாடும்  உன்அழகு - எந்தன்

எண்ணத்திலே நிலைத்திருக்கு - உந்தன் 

காலடியில் தினமிருக்க - என்

கடின மனம் போக்காயோ


கோயிலுக்கு தினம் சென்றேன் - உந்தன் 

புசையிலே நான் நனைய - எந்தன்

இடர்களை களைந்து  - உன்

திருவடியில் சேர்காயோ


எத்திசையில் நானிருந்தும் - உந்தன்

திருவழகை எண்ணிடுவேன் - எந்தன்

தீமைக்கு  தீயிட்டு -  உன்

திசையை காட்டாயோ


கணிசமான  உன் பார்வை - எந்தன் 

செயல்களிலே நிலைத்திருக்கு -  உந்தன்

கடைக்கண்ணின் ஒளி  கொண்டு - என்

கடைமைகளை  பார்காயோ


அழகான  என் வாழ்வு - உந்தன்

அன்பினிலே தான் இருக்கு - என்

வழமான வாழ்விற்கு - உன் 

வரமொன்று தாராயோ







No comments:

Post a Comment