பரீட்சை நேரம் கிட்ட
பாடமெல்லாம் மெல்ல மறந்தோட
பார்பவர் கேள்விகள் கேட்டோட
பெற்றோர் கர்ச்சனை காதோட
வாத்தியார் வாசலில் பிரம்போட
மனமோ என்னை விட்டோட
பரீட்சை நேரம் வந்தோட
பரீட்சை வினாக்கள் கையோட
விரலும் கேட்கும் விட்டோட
என் வயதும் நினைக்கும் நிற்பாட்ட
பரீட்சை போதும் பிற்போட
நாறிப் போவேன் விட்டோட
அச்சமெல்லாம் விட்டோட
அறிவின் மையம் என்னோட
கற்றால் பரீட்சை வாழ்வோட
கலந்து போகும் நீரோட
No comments:
Post a Comment